போட்டோ எடுத்து விட்டு பிரிண்ட் போடுவேன். வீட்டு பொருளாதார சூழ்நிலை
மற்றும் என்னுடைய ஆர்வம் யாருக்கும் தெரியாத நிலையில் அவ்வவ்போது
இது தொடர்ந்து கொண்டே இருந்தது . என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்
எனது தந்தை ஒரு olympus camera வாங்கினார். எனக்கு பயங்கர சந்தோசம் .
ஆனால் நானோ சென்னையில் , camera ஓ நெல்லையில். ஆனாலும் நெல்லை
செல்லும் போதெல்லாம் குறைந்தது 2 ரோல்கள் எடுக்காமல் செல்ல மாட்டேன் .
ஒரு கட்டத்தில் என் தந்தை நான் நெல்லை சென்றாலே பயப்பட ஆரம்பித்தார் .
ஏனென்றால் ஒரு ரோல் 250ரூபாய் என்றால் இரண்டு ரோல் .......! பொறுப்பான
பிள்ளை அல்லவா நான் . நானே ஒரு கட்டத்தில் என் ஆர்வத்தை கட்டுப்படுத்தி
கொண்டேன் . எனது தந்தைக்கு பரம மகிழ்ச்சி மகன் திருந்தி விட்டான் என்று .
ஆனால் புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் எள்ளளவும் எனக்கு
குறையவில்லை . நானே எனது சொந்த பணத்தில் ஒரு camera வாங்க தருணம்
பார்த்து கொண்டே இருந்தேன் . ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை
அந்த தருணம் வரவே இல்லை . காரணம் நான் வேலைக்கே செல்ல
வில்லையே. ஒரு வழியாக LIC வேலை கொடுத்தது . முதல் மாத
சம்பளத்திலேயே ஒரு camera வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தேன் .
நண்பர்களிடத்தில் என்ன camera வாங்குவது என்று தீவிர ஆலோசனை .....
எனக்கு photographyயில் ஆர்வம் இருந்த அளவுக்கு cameraக்கள் பற்றி எதுவுமே
தெரியாது . எனவே பலரும் பல camera க்களை பரிந்துரை செய்ய குழப்பம்தான்
மிச்சம் . ஒரு வழியாக sony வாங்கலாம் என்று முடிவு செய்த பொழுது
என்னுடைய வேலை முட்டுகட்டையாக வந்து நின்றது ( development officer in LIC).
என்னுடைய சம்பளத்தை வீட்டிற்கும் கொடுக்கவில்லை நானும்
அனுபவிக்கவில்லை . முகவர்களை நியமனம் செய்யவே சரியாக இருந்தது .
பொறுமை பொறுமை பொறுமை என்று எனக்கு நானே சமாதானம் செய்து
கொண்டேன் .இடையில் திருமணம் வேறு . ஒரு வழியாக பணி நிரந்தரம்
செய்யப்பட்டேன் . சரி எடுத்த செயல் நிறைவேற்று என்று மனம் கூறியது .
நானும் என் மனைவியும் பட்ஜெட் போட்டோம், camera பட்ஜெட். பத்தாயிரம்
என்று முடிவானது. சொந்த பணத்தில் camera கனவு நனவாக போகின்ற சமயம் ...
மனைவியின் தங்கை போன் செய்தாள் " அத்தான் உங்கள் கல்யாணத்துக்கு
நான் எந்த பரிசும் தரவில்லை . ஒரு camera வாங்கி தரலாம்னு நினைக்கிறேன்."
ஆஹா , நம்ம சொந்த பணத்தில் camera வாங்க கொடுத்து வைக்கவில்லையோ
என்று எண்ணி கொண்டே கடை சென்றோம் . canon ixus 80 is இப்போது கையில்.
இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்தால் உங்கள் காதில் விழும் முதல்
வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் " ஏன்தான் என் தங்கச்சி உங்களுக்கு camera வாங்கி கொடுத்தாளோ. எப்ப பார்த்தாலும் காமெராவும் கையுமாக.....
மற்றும் என்னுடைய ஆர்வம் யாருக்கும் தெரியாத நிலையில் அவ்வவ்போது
இது தொடர்ந்து கொண்டே இருந்தது . என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்
எனது தந்தை ஒரு olympus camera வாங்கினார். எனக்கு பயங்கர சந்தோசம் .
ஆனால் நானோ சென்னையில் , camera ஓ நெல்லையில். ஆனாலும் நெல்லை
செல்லும் போதெல்லாம் குறைந்தது 2 ரோல்கள் எடுக்காமல் செல்ல மாட்டேன் .
ஒரு கட்டத்தில் என் தந்தை நான் நெல்லை சென்றாலே பயப்பட ஆரம்பித்தார் .
ஏனென்றால் ஒரு ரோல் 250ரூபாய் என்றால் இரண்டு ரோல் .......! பொறுப்பான
பிள்ளை அல்லவா நான் . நானே ஒரு கட்டத்தில் என் ஆர்வத்தை கட்டுப்படுத்தி
கொண்டேன் . எனது தந்தைக்கு பரம மகிழ்ச்சி மகன் திருந்தி விட்டான் என்று .
ஆனால் புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் எள்ளளவும் எனக்கு
குறையவில்லை . நானே எனது சொந்த பணத்தில் ஒரு camera வாங்க தருணம்
பார்த்து கொண்டே இருந்தேன் . ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை
அந்த தருணம் வரவே இல்லை . காரணம் நான் வேலைக்கே செல்ல
வில்லையே. ஒரு வழியாக LIC வேலை கொடுத்தது . முதல் மாத
சம்பளத்திலேயே ஒரு camera வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தேன் .
நண்பர்களிடத்தில் என்ன camera வாங்குவது என்று தீவிர ஆலோசனை .....
எனக்கு photographyயில் ஆர்வம் இருந்த அளவுக்கு cameraக்கள் பற்றி எதுவுமே
தெரியாது . எனவே பலரும் பல camera க்களை பரிந்துரை செய்ய குழப்பம்தான்
மிச்சம் . ஒரு வழியாக sony வாங்கலாம் என்று முடிவு செய்த பொழுது
என்னுடைய வேலை முட்டுகட்டையாக வந்து நின்றது ( development officer in LIC).
என்னுடைய சம்பளத்தை வீட்டிற்கும் கொடுக்கவில்லை நானும்
அனுபவிக்கவில்லை . முகவர்களை நியமனம் செய்யவே சரியாக இருந்தது .
பொறுமை பொறுமை பொறுமை என்று எனக்கு நானே சமாதானம் செய்து
கொண்டேன் .இடையில் திருமணம் வேறு . ஒரு வழியாக பணி நிரந்தரம்
செய்யப்பட்டேன் . சரி எடுத்த செயல் நிறைவேற்று என்று மனம் கூறியது .
நானும் என் மனைவியும் பட்ஜெட் போட்டோம், camera பட்ஜெட். பத்தாயிரம்
என்று முடிவானது. சொந்த பணத்தில் camera கனவு நனவாக போகின்ற சமயம் ...
மனைவியின் தங்கை போன் செய்தாள் " அத்தான் உங்கள் கல்யாணத்துக்கு
நான் எந்த பரிசும் தரவில்லை . ஒரு camera வாங்கி தரலாம்னு நினைக்கிறேன்."
ஆஹா , நம்ம சொந்த பணத்தில் camera வாங்க கொடுத்து வைக்கவில்லையோ
என்று எண்ணி கொண்டே கடை சென்றோம் . canon ixus 80 is இப்போது கையில்.
இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்தால் உங்கள் காதில் விழும் முதல்
வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் " ஏன்தான் என் தங்கச்சி உங்களுக்கு camera வாங்கி கொடுத்தாளோ. எப்ப பார்த்தாலும் காமெராவும் கையுமாக.....
